அந்தியூர் அருகே வனக்குட்டையில் மூழ்கி இறந்தவர் உடல் அடையாளம் தெரிந்தது சாவில் சந்தேகம் என மனைவி புகார்

அந்தியூர் அருகே வனக் குட்டையில் மூழ்கி இறந்தவர் உடல் அடையாளம் தெரிந்தது. சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் பொன்னாச்சியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வனக்குட்டையில் அரை நிர்வாண நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்தபடி கிடந்தது. இதுகுறித்து வனப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ப்பவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குட்டையில் மிதந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், குட்டையில் மூழ்கி இறந்தவர், ‘சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 41), ஆம்னி வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான சக்திவேல் (42), மணி (38), குப்பன் (35) ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மதுகுடித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பர்கூர் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டையில் 4 பேரும் குளித்து உள்ளனர். அப்போது குமார் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் வனக்குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 3 பேரும் காரில் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் இறந்த குமாரின் மனைவி வளர்மதி மற்றும் உறவினர்கள் குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக அந்தியூர் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் பொன்னாச்சியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வனக்குட்டையில் அரை நிர்வாண நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்தபடி கிடந்தது. இதுகுறித்து வனப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ப்பவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குட்டையில் மிதந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், குட்டையில் மூழ்கி இறந்தவர், ‘சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 41), ஆம்னி வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான சக்திவேல் (42), மணி (38), குப்பன் (35) ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மதுகுடித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பர்கூர் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டையில் 4 பேரும் குளித்து உள்ளனர். அப்போது குமார் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் வனக்குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 3 பேரும் காரில் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் இறந்த குமாரின் மனைவி வளர்மதி மற்றும் உறவினர்கள் குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக அந்தியூர் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story