குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்து 2 டிரைவர்கள் பலி

குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் சுமார் 300 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்து 2 டிரைவர்கள் பலியாகினர்.
கூடலூர்,
திண்டுக்கல்-குமுளி சாலையில் தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி செல்வதற்கு மலைப்பாதை அமைந்துள்ளது. நேற்று காலை கேரள மாநிலம் காஞ்சிரம்பள்ளியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பலாப்பழங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லுஸ்தம் என்பவர் ஓட்டினார். அவருடன் மற்றொரு டிரைவரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அலீம் (23) இருந்தார்.
அந்த லாரி குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டை ஊசி வளைவில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த லோயர்கேம்ப் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வனத்துறையினர், தீயணைப்புபடையினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே லுஸ்தம் இறந்து விட்டார். படுகாயத்துடன் இருந்த லாரி டிரைவர் அலீமை போலீசார் மீட்டனர். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் லாரியின் முன்பகுதி மண்ணுக்குள் புதைந்ததால் டிரைவர் லுஸ்தம் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் நீண்ட நேரம் போராடி லுஸ்தம் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து லாரி உரிமையாளர் சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்-குமுளி சாலையில் தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி செல்வதற்கு மலைப்பாதை அமைந்துள்ளது. நேற்று காலை கேரள மாநிலம் காஞ்சிரம்பள்ளியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பலாப்பழங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லுஸ்தம் என்பவர் ஓட்டினார். அவருடன் மற்றொரு டிரைவரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அலீம் (23) இருந்தார்.
அந்த லாரி குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டை ஊசி வளைவில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த லோயர்கேம்ப் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வனத்துறையினர், தீயணைப்புபடையினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே லுஸ்தம் இறந்து விட்டார். படுகாயத்துடன் இருந்த லாரி டிரைவர் அலீமை போலீசார் மீட்டனர். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் லாரியின் முன்பகுதி மண்ணுக்குள் புதைந்ததால் டிரைவர் லுஸ்தம் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் நீண்ட நேரம் போராடி லுஸ்தம் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து லாரி உரிமையாளர் சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story