வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

பொன்னேரி அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொன்னேரி,
சோழவரத்தை அடுத்த ஒரக்காடில் ஷூ தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பழவேற்காடு, பொன்னேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
இதில் வேனில் இருந்த சாட்டாங்குப்பத்தை சேர்ந்த சுகுணா, பழவேற்காடை சேர்ந்த செவ்வந்தி, ஜீவிதா, அமலா, ரம்யா உள்பட 15 பெண் கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வேனை ஓட்டிய சோழவரத்தை சேர்ந்த ஷபில் படுகாயம் அடைந்தார். சுகுணா மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோழவரத்தை அடுத்த ஒரக்காடில் ஷூ தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பழவேற்காடு, பொன்னேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் அருகே காஞ்சிவாயிலில் ஒருவளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த சாட்டாங்குப்பத்தை சேர்ந்த சுகுணா, பழவேற்காடை சேர்ந்த செவ்வந்தி, ஜீவிதா, அமலா, ரம்யா உள்பட 15 பெண் கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வேனை ஓட்டிய சோழவரத்தை சேர்ந்த ஷபில் படுகாயம் அடைந்தார். சுகுணா மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story