மகனுடன் சென்ற போது பரிதாபம்: வேன் மீது மொபட் மோதி பெண் பலி

மகனுடன் மொபட்டில் சென்றபோது, வேன் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்த தாய் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம், காந்தி நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் வீரராகவன். இவருடைய மனைவி செல்வி (வயது 46). இவர்களுடைய மகன் டில்லிபாபு(27). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை செல்வி, குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது மகனுடன் மொபட்டில் சென்றார். மொபட்டை டில்லிபாபு ஓட்டினார். அவருக்கு பின்னால் செல்வி அமர்ந்து இருந்தார். போரூர்-குன்றத்தூர் சாலையில் மவுலிவாக்கம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வேன் மீது மொபட் மோதியது.
இதில் தாய்-மகன் இருவரும் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது சாலையோரம் புதிதாக அமைப்பதற்காக போடப்பட்டு இருந்த இரும்பு மின்கம்பத்தில் செல்வியின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருடைய மகன் டில்லிபாபு காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி மேல்மா நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா(25). தனியார் கூரியர் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி அம்பேத்கர் நகர், ஈஸ்வரி தெரு வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மின் கம்பம் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜீவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம், காந்தி நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் வீரராகவன். இவருடைய மனைவி செல்வி (வயது 46). இவர்களுடைய மகன் டில்லிபாபு(27). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை செல்வி, குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது மகனுடன் மொபட்டில் சென்றார். மொபட்டை டில்லிபாபு ஓட்டினார். அவருக்கு பின்னால் செல்வி அமர்ந்து இருந்தார். போரூர்-குன்றத்தூர் சாலையில் மவுலிவாக்கம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வேன் மீது மொபட் மோதியது.
இதில் தாய்-மகன் இருவரும் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது சாலையோரம் புதிதாக அமைப்பதற்காக போடப்பட்டு இருந்த இரும்பு மின்கம்பத்தில் செல்வியின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருடைய மகன் டில்லிபாபு காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி மேல்மா நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா(25). தனியார் கூரியர் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி அம்பேத்கர் நகர், ஈஸ்வரி தெரு வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மின் கம்பம் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜீவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story