படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த கடலூர் மீனவர்கள் - 10 மணி நேரத்துக்குப்பின் மீட்பு

படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த கடலூர் மீனவர்கள், 10 மணி நேரத்துக்குப்பிறகு மீட்கப்பட்டனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் திருஞானம் (வயது 32), தண்டபாணி மகன் பன்னீர் (45), மணி மகன் விஜய் (19). மீனவர்களான இவர்கள் 3 பேரும் பைபர் படகில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை 9 மணிக்கு துறைமுகத்துக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் நேற்று மதியம் 1 மணி ஆகியும் துறைமுகத்துக்கு திரும்பி வரவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவர்களது குடும்பத்தினர், இது பற்றி மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் கடலோர காவல் படையினர் நவீன படகில் சென்று 3 மீனவர்களையும் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனிடையே மற்றொரு படகில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். மாலை 3.30 மணி அளவில் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த திருஞானம், பன்னீர், விஜய் ஆகிய 3 பேரும் கையசைத்து உதவி செய்யுமாறு கூறினர்.
இதையடுத்து மீனவர்கள், அவர்களுக்கு அருகில் படகில் சென்று, 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது அவர்கள், மீன்பிடித்து விட்டு துறைமுகத்துக்கு திரும்பிய போது அதிகாலை 5.30 மணிக்கு படகு என்ஜின் பழுதாகி நின்றதால் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து பழுதான படகை கயிறு மூலம் கட்டி கடலூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். நேற்று மாலை அவர்கள் 3 பேரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் திருஞானம் (வயது 32), தண்டபாணி மகன் பன்னீர் (45), மணி மகன் விஜய் (19). மீனவர்களான இவர்கள் 3 பேரும் பைபர் படகில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை 9 மணிக்கு துறைமுகத்துக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் நேற்று மதியம் 1 மணி ஆகியும் துறைமுகத்துக்கு திரும்பி வரவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவர்களது குடும்பத்தினர், இது பற்றி மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் கடலோர காவல் படையினர் நவீன படகில் சென்று 3 மீனவர்களையும் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனிடையே மற்றொரு படகில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். மாலை 3.30 மணி அளவில் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த திருஞானம், பன்னீர், விஜய் ஆகிய 3 பேரும் கையசைத்து உதவி செய்யுமாறு கூறினர்.
இதையடுத்து மீனவர்கள், அவர்களுக்கு அருகில் படகில் சென்று, 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது அவர்கள், மீன்பிடித்து விட்டு துறைமுகத்துக்கு திரும்பிய போது அதிகாலை 5.30 மணிக்கு படகு என்ஜின் பழுதாகி நின்றதால் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து பழுதான படகை கயிறு மூலம் கட்டி கடலூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். நேற்று மாலை அவர்கள் 3 பேரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர்.
Related Tags :
Next Story