திருமணமான 2 மாதத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 2 மாதத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 23 Nov 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

உறையூரில் திருமணமான 2 மாதத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜ் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் சரவணன்(வயது 22). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவருடைய மனைவி 3 நாட்களாக பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.

அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் மனமுடைந்த சரவணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார், விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story