கொடுங்கையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கொடுங்கையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் நவீன்(வயது 19). இவர், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்தார். மதனுக்கும், அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவிக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவி, கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் கல்லூரி முதல்வர், நவீனை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. மேலும் கல்லூரியில் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவர்களும் அவரை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த நவீன், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story