கிருஷ்ணகிரியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி


கிருஷ்ணகிரியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 Jan 2019 10:15 PM GMT (Updated: 24 Jan 2019 4:37 PM GMT)

கிருஷ்ணகிரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, 

இந்திய ஜனநாயகத்தின் வாக்கு உரிமையான வாக்களிப்பதை கடமையாக கொண்டு 100 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினம் ஜனவரி மாதம் 25-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (வெள்ளிக் கிழமை) தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை வலியுறுத்தி அனைவரும் வாக்களிக்க வேண்டும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்று வட்டவடிவில் தேசிய வாக்காளர் தினம் என்பதை குறிக்கும் வகையில் என். வி.டி. என்கிற ஆங்கில எழுத்தை மையமாக கொண்டும் 25.1.2019 என்கிற தேதியை வைத்தும் ஒன்றிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய மக்களின் கடமையாகும் வரக்கூடிய தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களிக்க முன் வர வேண்டும். பெற்றோர்கள் வாக்களிக்க தவறினாலும் குழந்தைகளான நீங்கள் பெற்றோரை வலியுறுத்தி அவர்களை வாக்களிக்க கட்டாயப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Next Story