மேச்சேரி அருகே பஸ்சில் தூங்கிய டிரைவர் சாவு


மேச்சேரி அருகே பஸ்சில் தூங்கிய டிரைவர் சாவு
x
தினத்தந்தி 22 April 2019 9:45 PM GMT (Updated: 22 April 2019 8:14 PM GMT)

மேச்சேரி அருகே பஸ்சில் தூங்கிய டிரைவர் இறந்தார்.

மேச்சேரி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து கீரைக்காரனூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் (வயது 56) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக மேச்சேரி சாத்தப் பாடியை சேர்ந்த முருகன் என்பவர் இருந்தார்.

பஸ் இரவில் கீரைக்காரனூருக்கு சென்றதும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் முருகன் ஆகியோர் பஸ்சுக்குள் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 4.45 மணியளவில் கண்டக்டர் முருகன் விழித்தெழுந்தார். பின்னர் அவர் டிரைவர் செல்வராஜை தட்டி எழுப்பினார். ஆனால் செல்வராஜ் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுபற்றி மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். செல்வராஜை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுபற்றி மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த செல்வராஜிக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story