போலி ஆடியோ வெளியிட்டதாக வக்கீல் மீண்டும் கைது முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் போலீசார் நடவடிக்கை

முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், போலியான ஆடியோ வெளியிட்டதாக பெரம்பலூர் வக்கீல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து போலீசார், மீண்டும் அவரை கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்கள் பலரை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் யாரையும் விசாரிக்காமல், கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்தனர். மேலும் வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தொடர்பாக செல்போனில் பேசியதாக வெளியிட்ட ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம் கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் திருச்சி மத்திய சிறையில் நேற்று முன்தினம் வக்கீல் அருள் உண்ணாவிரதம் இருந்தார். இதற்கிடையே தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு, வக்கீல் அருளுக்கு ஜாமீன் கேட்டு, அவரது தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வக்கீல் அருளை தூத்துக்குடியில் தங்கியிருந்து, டவுன் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் வக்கீல் அருள் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 2-வது வழக்காக பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அந்த வழக்கில் கைது செய்தற்கான ஆணையின் நகலை வக்கீல் அருளிடம் போலீசார் காண்பித்து கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. இதனால் முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்தும், வக்கீல் அருளால் வெளியே வர முடியவில்லை. இதனால் 2-வது வழக்கிற்கு ஜாமீன் கேட்டு, வக்கீல் அருள் தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த வழக்கின் மீதான விசாரணை வருகிற 8-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வக்கீல் அருளுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அதற்குள் 3-வது வழக்கில் வக்கீல் அருள் போலீசாரால் கைது செய்யப்படுவாரா? என்பது வருகிற 8-ந்தேதி தான் தெரியும்.
பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்கள் பலரை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் யாரையும் விசாரிக்காமல், கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்தனர். மேலும் வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தொடர்பாக செல்போனில் பேசியதாக வெளியிட்ட ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம் கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் திருச்சி மத்திய சிறையில் நேற்று முன்தினம் வக்கீல் அருள் உண்ணாவிரதம் இருந்தார். இதற்கிடையே தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு, வக்கீல் அருளுக்கு ஜாமீன் கேட்டு, அவரது தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வக்கீல் அருளை தூத்துக்குடியில் தங்கியிருந்து, டவுன் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் வக்கீல் அருள் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 2-வது வழக்காக பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அந்த வழக்கில் கைது செய்தற்கான ஆணையின் நகலை வக்கீல் அருளிடம் போலீசார் காண்பித்து கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. இதனால் முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்தும், வக்கீல் அருளால் வெளியே வர முடியவில்லை. இதனால் 2-வது வழக்கிற்கு ஜாமீன் கேட்டு, வக்கீல் அருள் தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த வழக்கின் மீதான விசாரணை வருகிற 8-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வக்கீல் அருளுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அதற்குள் 3-வது வழக்கில் வக்கீல் அருள் போலீசாரால் கைது செய்யப்படுவாரா? என்பது வருகிற 8-ந்தேதி தான் தெரியும்.
Related Tags :
Next Story