கழிவுநீர் கலந்து வருவதாக கூறி குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை குடிநீர் வாரியம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. கழிவுநீர் கலந்துவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
பூந்தமல்லி,
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., மகாத்மா காந்தி தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் எப்போதேனும் வழங்கப்படும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்துவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரும்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., மகாத்மா காந்தி தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் எப்போதேனும் வழங்கப்படும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்துவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரும்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story