தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆய்வு


தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆய்வு
x
தினத்தந்தி 17 Aug 2019 10:00 PM GMT (Updated: 17 Aug 2019 8:30 PM GMT)

தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில், மாவட்ட காவல்துறையின் பயன்பாட்டில் உள்ள 160 மோட்டார் சைக்கிள்கள், 126 கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். அவர், பழுதடைந்த வாகனங்களை பழுது நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போலீசார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதே போல் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போலீசார் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கடைபிடித்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story