சேத்தியாத்தோப்பில், பெண்ணை கொன்ற தந்தை கைது - மேலும் 2 பேர் சிக்கினர்


சேத்தியாத்தோப்பில், பெண்ணை கொன்ற தந்தை கைது - மேலும் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 2 Sep 2019 10:15 PM GMT (Updated: 2 Sep 2019 8:21 PM GMT)

சேத்தியாத்தோப்பில் பெண்ணை கொன்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி(வயது 40). இவருடைய மனைவி ரேவதி(34). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் ரேவதிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரேவதி, தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரேவதியை, அவருடைய தந்தை கண்ணன்(55) அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், தனது மகளின் நடத்தை சரியில்லை என்று மருமகன் ஜோதி தன்னிடம் தெரிவித்தார். இதனால் அவரது வீட்டிற்கு சென்று எனது மகளை கண்டித்தேன். அப்போது அவரை தாக்கியதில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்டதாக கூறி அதே பகுதியை சேர்ந்த கண்ணனின் நண்பர்கள், உறவினர்கள் என்று மொத்தம் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சங்கர்(42), ராதாகிருஷ்ணன்(50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை தேடி வருகின்றனர். மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story