கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு நாளை பக்தர்கள் புனித பயணம் இல.கணேசன் எம்.பி. தொடங்கி வைக்கிறார்


கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு நாளை பக்தர்கள் புனித பயணம் இல.கணேசன் எம்.பி. தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு நாளை பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். இதை இல.கணேசன் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு நாளை பக்தர்கள் இருமுடி கட்டி, புனிதநீர் சுமந்து பயணமாக புறப்பட்டு செல்கிறார்கள். இந்த பயணத்துக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட ரதம் செல்கிறது.

இதன் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு காலை 8 மணிக்கு நடக்கிறது. இதற்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். காளிமலை அறக்கட்டளை துணைத்தலைவர் ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்கிறார். வெள்ளி மலை இந்து தர்மபீடம் அமைப்பு தலைவர் சைதன்யானந்தமகராஜ் ஆசியுரை வழங்குகிறார்.

புனித பயணம்

இந்த புனித பயணத்தை பா.ஜ.க. அகில பாரத செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இதில் குமரி மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் எஸ்.பி. அசோகன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், காளிமலை டிரஸ்ட் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் வித்யாதரன், பொருளாளர் ராஜ்குமார், விழாக்குழு தலைவர் வேலுதாஸ், பொதுசெயலாளர் சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.இந்த புனித பயணம் விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம், பொற்றையடி, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டார், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, வடசேரி வழியாக 5-ந் தேதி பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்றடைகிறது. 

Next Story