கும்பகோணம் அருகே, ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு


கும்பகோணம் அருகே, ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 21 Oct 2019 3:30 AM IST (Updated: 21 Oct 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் உயிரிழந்தார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த சத்திரம் கருப்பூர் வானவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் காளிதாஸ் (வயது 28). டிரைவர். இவருடைய மனைவி நிலவழகி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காளிதாஸ், அதே பகுதியில் உள்ள காவிரி மற்றும் வீரசோழன் ஆறு பிரியும் தலைப்பு பகுதியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் மூழ்கி உயிழந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் காளிதாஸ் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story