பெரம்பலூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான ஒற்றையர், இரட்டையர் கேரம் விளையாட்டு போட்டிகள், எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இளநிலை, முதுநிலை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான ஒற்றையர் இளநிலை பிரிவு போட்டியில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவி சங்கரி முதல் இடமும், பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவி மதுமிதா 2-வது இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அணி முதல் இடமும், புனித ஜோசப்பள்ளி மாணவிகள் அணி 2-வது இடமும் பெற்றனர். மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர் சரவணன் முதல் இடத்தையும், பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் தவனேஷ் 2-வது இடத்தையும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும், மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2-வது இடத்தையும் பெற்றனர்.
பரிசளிப்பு
6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் முதுநிலை பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் தந்தை ரோவர் பள்ளி மாணவர் தீனதயாளன் முதல் இடமும், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தாத்தையா 2-வது இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் இடமும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவர்கள் 2-வது இடமும் பெற்றனர். மாணவிகளுக்கான ஒற்றையர் போட்டியில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி சவுமியா முதல் இடமும், தனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவி புஷ்பாதேவி 2-வது இடத்தையும் பெற்றனர். இரட்டையர் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடத்தையும் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். விழாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டேக்வாண்டோ பயிற்றுனர் தர்மராஜன் வரவேற்றார். முடிவில் கைப்பந்து பயிற்றுனர் வாசுதேவன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான ஒற்றையர், இரட்டையர் கேரம் விளையாட்டு போட்டிகள், எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இளநிலை, முதுநிலை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான ஒற்றையர் இளநிலை பிரிவு போட்டியில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவி சங்கரி முதல் இடமும், பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவி மதுமிதா 2-வது இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அணி முதல் இடமும், புனித ஜோசப்பள்ளி மாணவிகள் அணி 2-வது இடமும் பெற்றனர். மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர் சரவணன் முதல் இடத்தையும், பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் தவனேஷ் 2-வது இடத்தையும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும், மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2-வது இடத்தையும் பெற்றனர்.
பரிசளிப்பு
6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் முதுநிலை பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் தந்தை ரோவர் பள்ளி மாணவர் தீனதயாளன் முதல் இடமும், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தாத்தையா 2-வது இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் இடமும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவர்கள் 2-வது இடமும் பெற்றனர். மாணவிகளுக்கான ஒற்றையர் போட்டியில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி சவுமியா முதல் இடமும், தனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவி புஷ்பாதேவி 2-வது இடத்தையும் பெற்றனர். இரட்டையர் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடத்தையும் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். விழாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டேக்வாண்டோ பயிற்றுனர் தர்மராஜன் வரவேற்றார். முடிவில் கைப்பந்து பயிற்றுனர் வாசுதேவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story