குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பல்ேவறு அரசியில் கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதைத்தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ -மாணவிகள், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முன்பு ேநற்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நேற்று காலையில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முன்பு ஒன்று திரண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் உதயகுமார் மாணவர்களிடம், ‘பல்வேறு கல்லூரிகளில் இருந்து இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு. எனவே நீங்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ என்று அறிவுரை கூறினார். அதைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story