படகில் சென்று மீன்பிடித்த போது தவறி விழுந்தார்: கடலில் மூழ்கிய மீனவரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

படகில் சென்று மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை ேதடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கன்னியாகுமரி,
நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு சொந்தமான வள்ளம் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் சிட்டோரியன் (வயது 46) உள்பட 7 பேர் முட்டத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.
கன்னியாகுமரி அருகே கடல் பகுதியில் நள்ளிரவு மீன்பிடித்து ெகாண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிட்டோரியன் கடலில் தவறி விழுந்து விட்டார்.
கதி என்ன?
இதனால் கடலில் மூழ்கிய அவரை சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரை திரும்பினர்.
பின்னர் சிட்டோரியன் கடலில் மூழ்கிய தகவலை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மற்ற மீனவர்கள் படகில் சென்று சிட்டோரியனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு சொந்தமான வள்ளம் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் சிட்டோரியன் (வயது 46) உள்பட 7 பேர் முட்டத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.
கன்னியாகுமரி அருகே கடல் பகுதியில் நள்ளிரவு மீன்பிடித்து ெகாண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிட்டோரியன் கடலில் தவறி விழுந்து விட்டார்.
கதி என்ன?
இதனால் கடலில் மூழ்கிய அவரை சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரை திரும்பினர்.
பின்னர் சிட்டோரியன் கடலில் மூழ்கிய தகவலை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மற்ற மீனவர்கள் படகில் சென்று சிட்டோரியனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story