உளுந்தூர்பேட்டை அருகே, இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே, இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2020 3:45 AM IST (Updated: 31 Dec 2019 7:17 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் அபிதா(வயது 18). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் அபிதாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகினற்னர். 

Next Story