குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் காதலன் கைது


குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் காதலன் கைது
x
தினத்தந்தி 24 Feb 2020 9:31 PM GMT (Updated: 24 Feb 2020 9:31 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேப்பனப்பள்ளி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் 16 வயது சிறுவன். இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனும் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலையில் வேப்பனப்பள்ளி பஸ் நிலையத்தில் மாணவனும், மாணவியும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவனின் நண்பர்களான வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜோடுகொத்தூரை சேர்ந்த வெங்கடப்பன் என்பவரின் மகன் ராஜா (26), திம்மசந்திரத்தை சேர்ந்த சின்னப்பா என்பவரின் மகன் மஞ்சு என்கிற மஞ்சுநாத் (22) ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர்.

பாலியல் பலாத்காரம்

பின்னர் அவர்கள் 3 பேரும் மாணவியை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து சாதாரண குளிர்பானம் எனக்கூறி மாணவியிடம் குடிக்க கொடுத்தனர். அதை நம்பி குளிர்பானத்தை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கினார். இதையடுத்து அந்த மாணவியை பள்ளி மாணவன் உள்பட 3 பேரும் மறைவிடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத் காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் மயக்கம் தெளிந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதார். அதைக் கேட்ட அவரது தாய் இது குறித்து கிரு‌‌ஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கற்பகம் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலனை கைது செய்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் அவரது நண்பர்களான ராஜா, மஞ்சு என்கிற மஞ்சுநாத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் மீதும், போக்சோ பிரிவு, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story