வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2020 3:30 AM IST (Updated: 28 March 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீ சார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப் பில் கூறப்படுவதாவது:-

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 21 நாட் களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்தியா வசிய தேவைகளுக்காக வருப வர்கள் முககவசம் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதனால் சாலை களில் ஆங்காங்கே செல்ப வர்கள் முககவசம் அணிந்து சென்று வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி- தஞ்சை மெயின்ரோடு காந்தி மார்க்கெட் பூக்கொல்லையை சேர்ந்த நிஜாமுதீன்(வயது 34) என்பவர் நேற்று அதிகாலை வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப் போது முககவசம் அணிந்தபடி அவரது வீட்டிற்குள் 3 பேர் புகுந்தனர்.

அங்கு தூங்கிக்கொண்டி ருந்த நிஜாமுதீனை, அவர்கள் தாங்கள் கொண்டுவந்த அரி வாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் அவர் படுகாயம் அடைந் தார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை யில் அதே பகுதியை சேர்ந்த சித்திக், பரத்குமார், சர்புதீன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவரை வெட்டி யது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story