நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் அபிராமி(வயது 17). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஊரடங்கு உத்தரவால் தற்போது கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அபிராமி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில், மின் விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், அபிராமியின் உடலை கைப்பற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story