காஞ்சீபுரத்தில் நலவாரிய அடையாள அட்டை வைத்துள்ள தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரத்தில் நலவாரிய அடையாள அட்டை வைத்துள்ள தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 April 2020 10:45 PM GMT (Updated: 28 April 2020 10:28 PM GMT)

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டையை வைத்துள்ள பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வந்தாலோ அல்லது ஓய்வு பெற்று இருந்தாலோ கொரோனா நிவாரண உதவிதொகையாக ரூ.1000 பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் வரக்கூடாது

இந்த நிவாரண உதவித்தொகையினை பெறுவதற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் தாட்கோ அலுவலகத்தில் மாவட்ட மேலாளர் மா.கு.தேவசுந்தரியை 04427237842 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 9445029462, 9003372688 என்ற எண்ணுக்கும் வாட்ஸ்-அப் மூலம் நலவாரிய அடையாள அட்டையின் விவரத்தை படம் எடுத்து அனுப்பிவிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதுசம்பந்தமாக எவரும் அலுவலகத்திற்கு நேரில் வரக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் காஞ்சீபுரம் கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story