சென்னையில் இருந்து மயிலாடுதுறை வந்த பெண்ணுக்கு கொரோனா

சென்னையில் இருந்து கடந்த 31-ந் தேதி மயிலாடுதுறைக்கு 3 பெண்கள் காரில் வந்தனர்.
குத்தாலம்,
சென்னையில் இருந்து கடந்த 31-ந் தேதி மயிலாடுதுறைக்கு 3 பெண்கள் காரில் வந்தனர். இதில் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தை சேர்ந்த பெண், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருடன் சேர்ந்து பயணம் செய்த மகாராஜபுரத்தை சேர்ந்த 2 பெண்கள், கார் டிரைவர் மற்றும் தொற்று உறுதியான பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் 5 பேர் என மொத்தம் 8 பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து, மாப்படுகை கிராமத்தில் அந்த பெண் தங்கியிருந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story