சிறுமி கொலையை கண்டித்து சாலை மறியல்


சிறுமி கொலையை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 3 July 2020 11:50 AM IST (Updated: 3 July 2020 11:50 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிமளம் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story