மாவட்டத்தில் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2, 500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2, 500 ரொக்கத்துடன், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 4-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பரிசு தொகுப்பு
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்தியா, ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2, 500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி-சேலை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார்.
விடுபட்டவர்களுக்கு 13-ந்தேதி
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1, 420 பொது வினியோக திட்ட நியாயவிலை கடைகள் மூலமாக ரூ.190.79 கோடி செலவில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 356 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை வழங்கப்படும்.
விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
வேட்டி-சேலை
இதுதவிர ஏழை-எளிய மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 லட்சத்து 59 ஆயிரத்து 411 சேலைகளும், 6 லட்சத்து 56 ஆயிரத்து 886 வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது என்றார். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ஜெகத்ரட்சகன், கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி, அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2, 500 ரொக்கத்துடன், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 4-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பரிசு தொகுப்பு
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்தியா, ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2, 500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி-சேலை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார்.
விடுபட்டவர்களுக்கு 13-ந்தேதி
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1, 420 பொது வினியோக திட்ட நியாயவிலை கடைகள் மூலமாக ரூ.190.79 கோடி செலவில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 356 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை வழங்கப்படும்.
விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
வேட்டி-சேலை
இதுதவிர ஏழை-எளிய மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 லட்சத்து 59 ஆயிரத்து 411 சேலைகளும், 6 லட்சத்து 56 ஆயிரத்து 886 வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது என்றார். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ஜெகத்ரட்சகன், கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி, அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story