காரிமங்கலத்தில் எருதுவிடும் விழா. மாடு முட்டி படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு

காரிமங்கலம் ராமசாமி கோவில் வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 17-ந்தேதி எருது விடும் விழா நடைபெற்றது.
காரிமங்கலம்,
காரிமங்கலம் ராமசாமி கோவில் வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 17-ந்தேதி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதனை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான சின்னத்தம்பி (வயது 42) என்பவரும் எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மாடு் சின்னத்தம்பியை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சின்னத்தம்பி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எருது விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story