கடையநல்லூர் அருகே ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கடையநல்லூர் அருகே ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மக்கா நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவா் செய்யது சுலைமான் மகன் அப்துல் அஜீஸ் (வயது 22). இவர் கடையநல்லூரில் உள்ள பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் அருகே உள்ள மங்களபுரம் சென்றுள்ளார். அங்கு திடீரென்று செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு விரைவு ரெயிலில் பாய்ந்து அப்துல் அஜீஸ் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவருடன் சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ரெயில்வே போலீசார் சம்பவ பகுதிக்கு வந்து அவரது உடலை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல் அஜீஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story