ஈரோட்டில் பரபரப்பு அடுத்தடுத்து 5 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு


ஈரோட்டில் பரபரப்பு அடுத்தடுத்து 5 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 Feb 2021 9:09 PM GMT (Updated: 11 Feb 2021 9:09 PM GMT)

ஈரோட்டில் அடுத்தடுத்து 5 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு போனது.

ஈரோடு
ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் ஜவுளிக்கடைகள் அதிகமாக உள்ளன. அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றனர். அப்போது அங்குள்ள 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது மொத்தம் ரூ.1½ லட்சம் திருட்டுபோனது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த ஏ.டி.எம். கார்டுகளும் திருட்டுபோய் இருந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, 2 வாலிபர்கள் முகமூடி அணிந்த நிலையில் ஒரு கம்பியை வைத்து பூட்டை உடைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் அடுத்தடுத்து 5 ஜவுளிக்கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story