தூக்குப்போட்டு பெண் தொழிலாளி தற்கொலை

பெண் தொழிலாளி தற்கொலை
கரூர்
கரூர் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 43). இவர், ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர், குடும்பம் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம். அவரிடம், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு உள்ளனர். இதனால், மனமுடைந்த பாப்பாத்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் ெதால்லையால் பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story