திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.
x
மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 25 Feb 2021 12:14 AM IST (Updated: 25 Feb 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருமயம்:
மாட்டு வண்டி பந்தயம்
திருமயம் அருகே உள்ள வி.லட்சுமிபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 27 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரியமாடு பிரிவில் எட்டு ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தை மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தலைவருமான வைரமுத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாடுகள் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. 
பரிசு
இதில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் வடகுடி நெல்லி ஆண்டவர் மாட்டு வண்டி தட்டிச்சென்றது. இரண்டாம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் மாவூர் ராமச்சந்திரன் என்பவர் மாட்டு வண்டி தட்டிச் சென்றது. மூன்றாம் பரிசை சிவகங்கை மாவட்டம் கள்ள பேட்டை மந்தையம்மன் என்பவர் மாட்டு வண்டி தட்டிச்சென்றது.
சிறிய மாடு பிரிவில் 19 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தை தொழிலதிபர் குமாரசாமி தொடங்கி வைத்தார். இதில் ஏரியூர் விஜய வேல் என்பவர் மாட்டு வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிவா மாட்டு வண்டி பெற்றது. மூன்றாம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் துளையனூர் பாஸ்கரன் மாட்டு வண்டியும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சிறந்த சாரதிகளுக்கு கொடி பரிசும் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story