வேன் மோதி டாக்டர்கள் படுகாயம்


வேன் மோதி டாக்டர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 24 Feb 2021 9:46 PM GMT (Updated: 24 Feb 2021 9:49 PM GMT)

வேன் மோதியதில் டாக்டர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

திருப்புவனம்,

காளையார்கோவில் அருகே உள்ள புலியடிதம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் போனிபேஸ், எடில்பேர்ட். இவர்கள் மதுரையில் சிந்தாமணி விலக்கு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் அம்மா மினி கிளினிக்கில் வேலை பார்க்க உத்தரவு வந்துள்ளது. இதைதொடர்ந்து அங்கு பணியில் சேர்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மணலூர் பிரிவு சாலையில் வரும்போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், வேன் டிரைவர் மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story