வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 2 March 2021 12:06 AM IST (Updated: 2 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

நொய்யல்
கரூர் கந்தம்பாளையம் அருகே உள்ள அலைமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 55). இவரது வீட்டில் நேற்று முன்தினம் பாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது. இதைக்கண்ட சபரிமுத்து அக்கம், பக்கத்தினரை அழைத்து பாம்பை வெளியே விரட்டியும் செல்லவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைணப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Next Story