வாகனம் மோதி விவசாயி சாவு

x
தினத்தந்தி 3 March 2021 2:43 AM IST (Updated: 3 March 2021 2:43 AM IST)


பணகுடி அருகே வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
பணகுடி, மார்ச்:
களக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 63). விவசாயி. இவர் நேற்று மதியம் பணகுடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ரோஸ்மியாபுரம் அருகே வடக்கு நோக்கி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மினிவேன் கந்தசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவரான நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த மணி மகன் வேல்முருகன் (26) என்பவரை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire