தீயணைப்பு துறையில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி


தீயணைப்பு துறையில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2021 10:54 PM IST (Updated: 14 April 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு துறையில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர்
கரூரில் நேற்று தீயணைப்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது நினைவு ஸ்தூபி போல உபகரணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு மாவட்ட அலுவலர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இதில் உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் நேற்று (14-ந்தேதி) முதல் வருகிற 20-ந் தேதி வரை தீத்தொண்டு நாள் வாரவிழா கடைப்பிடிக்கப்படுகிறது.
இதேபோல் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் உலக தீயணைப்பு தினத்தை தீ தொண்டு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Next Story