கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று உறுதி மொத்த பாதிப்பு 11337 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று உறுதி மொத்த பாதிப்பு 11337 ஆக உயர்ந்தது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 11 ஆயிரத்து 280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 10 ஆயிரத்து 920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 160 பேரின் உமிழ்நீர் மாதியை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது. இதில் 57 பேருக்கு தொற்று உறுதி ஆகி இருக்கிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 280-ல் இருந்து 11 ஆயிரத்து 337 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story