கொண்டலாம்பட்டி அருகே பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதி சுள்ளான் காட்டை சேர்ந்தவர் மணிவேல் (வயது 25). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி அனுசியா (22). இவர்களுக்கு ரிஷி (3) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிவேல் வீட்டுக்கு முன்பு இருந்த பனைமரத்தில் பனங்காய் குலை தள்ளிய நிலையில் இருந்தது. இதைப்பார்த்த மணிவேலுவின் மகன் ரிஷி, நுங்கு வேண்டும் என்று கேட்டுள்ளான். இதனால் மணிவேல் பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story