மதுபாட்டில்கள் பறிமுதல்


மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2021 1:41 AM IST (Updated: 27 April 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் வச்சகாரப்பட்டி  போலீசார் ரோந்து சென்றபோது சாத்தூர் தாலுகா சந்தையூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 20) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை சோதனை செய்த போது அவரிடம் 65 மது பாட்டில்களும், மது விற்ற ரூ.1500-ம், ஒரு சாக்குப்பையும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.


Next Story