போடியில் மாணவியை கடத்தி திருமணம் செய்த கொத்தனார் கைது

போடியில் மாணவியை கடத்தி திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
போடி:
போடி சுப்புராஜ் நகர், புதுகாலனியை சேர்ந்த ராஜ் மகன் ஜான்சன் (வயது 23). கொத்தனார். இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த சிறுமியும், ஜான்சனும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜான்சன் வீட்டில் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக ஜான்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story