இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2021 9:28 PM IST (Updated: 9 May 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள ஞானியார்குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன் மனைவி மகேஷ்வரி (வயது 38). முத்துகுமரன், திசையன்விளையில் உள்ள தனியார் மிட்டாய் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம்தேதி மகேஷ்வரியின் அண்ணன் மகள் பூப்புனித நீராட்டு விழா இளமாள்குளத்தில் நடைபெற்றது. இதில் மகேஷ்வரி சென்று பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஷ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்துகுமரன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் சென்று, மகேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story