மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்
x
தினத்தந்தி 10 May 2021 11:28 PM IST (Updated: 10 May 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்.

தோகைமலை, மே.11-
தோகைமலை போலீஸ் சரகம் கல்லடை ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் பவித்திரன் (வயது 4). இந்த சிறுவன் கல்லடை- கானாபுதூர் மெயின் ரோட்டோரம் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கரையான்பட்டியைச் சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பவித்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story