முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம்
காகிதபுரம் குடியிருப்பில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருத்திகையொட்டி முருகனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் முருகன் வள்ளி-தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் புன்னம் சத்திரம் அருகே வாழமலை முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர் பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story