ஏரியில் குதித்து மூதாட்டி தற்கொலை


ஏரியில் குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2021 10:07 PM IST (Updated: 13 May 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

ஹாவேரி அருகே வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கொரோனா பீதியால் மகன் வீட்டுக்குள் சேர்க்காததால் ஏரியில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

ஹாவேரி:

ஹாவேரி அருகே வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கொரோனா பீதியால் மகன் வீட்டுக்குள் சேர்க்காததால் ஏரியில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. 

78 வயது மூதாட்டி 

ஹாவேரி மாவட்டம் தேவி கொசூரு கிராமத்தை சேர்ந்தவர் அடிவக்கா கெப்பூரு (வயது 78). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தனது மகன், மருமகளுடன் அடிவக்கா வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிவக்காவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து அடிவக்கா மீண்டார். பின்னர் நேற்று முன்தினம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது மகளுடன் அடிவக்கா வீட்டுக்கு வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளதால், தனக்கும், மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற பீதியி்ல் அடிவக்காவை வீட்டுக்குள் வராக்கூடாது என மகன் கூறி விட்டார்.

ஏரியில் குதித்து தற்கொலை

இதனால் வீட்டில் இருந்து அடிவக்காவும் வந்து விட்டார். பின்னர் திடீரென்று அடிவக்கா காணாமல் போய் விட்டார். அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலையில் கிராமத்தில் உள்ள ஏரியில் வாலிபர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஏரியில் அடிவக்காவின் பிணம் மிதப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்ததும் ஹாவோி புறநகர் போலீசார் விரைந்து வந்து அடிவக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொரோனா பாதிப்பில் இருந்த அடிவக்கா மூலம் தங்களுக்கும் கொரோனா பரவி வரும் என்று, அவரை மகன் மற்றும் மருமகள் வீட்டுக்கு வருதற்கு அனுமதிக்காத காரணத்தால் அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்தது தெரியவந்து. இதுகுறித்து ஹாவேரி புறநகர் பேரீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story