போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 May 2021 4:13 PM GMT (Updated: 15 May 2021 4:13 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாய்ச்சல் ஊராட்சி புளியங்கொட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி கடந்த 13-ந்தேதி இரவு திடீரெனக் காணாமல் போய்விட்டார். 

பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவிைய தேடி வந்தனர். 

திருப்பத்தூர் அருகே சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமுவின் மகன் அருண்பிரசாத் (வயது 24) என்பவர் மாணவியை கடந்த 13-ந்தேதி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அவரை, ஜோலார்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Next Story