வாழப்பாடியில், வியாபாரிகள் வாங்க மறுத்ததால் புடலங்காய்களை நடுரோட்டில் கொட்டிய விவசாயி

வாழப்பாடியில், வியாபாரிகள் வாங்க மறுத்ததால் புடலங்காய்களை விவசாயி நடுரோட்டில் கொட்டினார்
வாழப்பாடி:
கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வாழப்பாடி தினசரி மண்டிக்கு புடலங்காய் மூட்டைகளை ஆத்தூர் கொத்தாம்பாடி அடுத்த சிவகங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசுப்ரமணியம் என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்தார். அங்கு மண்டியில் இருந்த வியாபாரிகள், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தங்களால் காய்கறிகளை விற்க முடியாது என்று அவரிடம் புடலங்காய்களை வாங்க மறுத்துள்ளனர். இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.
இதையடுத்து அந்த விவசாயி, 3 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த புடலங்காய்களை எடுத்து சென்று, வாழப்பாடி பஸ் நிலையம் அருகே, நடுரோட்டில் கொட்டி தனது வேதனையை வெளிப்படுத்தினார். இதைபார்த்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டி போட்டு அந்த காய்களை அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து காய்களை கொட்டிய விவசாயி சிவசுப்ரமணியம் மற்றும் காய்கறிகளை அள்ளுவதற்கு குவிந்த பொதுமக்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கடுமையாக உழைத்து உற்பத்தி செய்த காய்கறிகள் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி, புடலங்காய்களை சாலையில் கொட்டிய சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story