கண்மாயில் ஆண் பிணம் மீட்பு


கண்மாயில் ஆண் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 24 May 2021 1:13 AM IST (Updated: 24 May 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் உள்ள கண்மாயில் பிணம் மீட்கப்பட்டது.

ராஜபாளையம், 
ராஜபாளையம் சம்பந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது55). இவர் சென்னையில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்தார். தற்போது ஊரடங்கினால் ஊருக்கு திரும்ப வந்து விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தாலுகா அலுவலகம் அருகே உள்ள கண்மாய் பகுதியில் இவரது சைக்கிள் கிடந்துள்ளது. கண்மாயில் முகமது ரபி உடல் கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கண்மாயில் இருந்து உடலை மீட்ட போலீசார், அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story