களக்காடு அருகே பெண் தற்கொலை


களக்காடு அருகே  பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 May 2021 7:11 PM GMT (Updated: 27 May 2021 7:11 PM GMT)

களக்காடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 61). இவருடைய மனைவி சுந்தரி (58). இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். சுந்தரிக்கு கடந்த 4 ஆண்டுகளாக வாத நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த சுந்தரி, சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story