அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 184 பேர் மீது வழக்குப்பதிவு

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 184 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
கரூர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 129 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.25,800, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் சுமார் 18 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றி திரிந்தவர்கள் மீது சுமார் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 10 லிட்டர் கள்ளும், 30 லிட்டர் சாராய ஊறலும் அழிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 129 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.25,800, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் சுமார் 18 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றி திரிந்தவர்கள் மீது சுமார் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 10 லிட்டர் கள்ளும், 30 லிட்டர் சாராய ஊறலும் அழிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story