கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு


கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 May 2021 6:44 PM GMT (Updated: 29 May 2021 6:44 PM GMT)

கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூர்
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. 
அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 99 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம்  ரூ.19 ஆயிரத்து 800, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் சுமார் 9 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.4,500 வசூலிக்கப்பட்டது.
மது கடத்தல்
மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றி திரிந்தவர்கள் மீது சுமார் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தாக 4 பேர் கைது செய்யப்பட்டு, 3 லாரிகள் மற்றும் 95 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ேமலும் 7 லிட்டர் கள்ளும், 150 லிட்டர் சாராய ஊறலும் அழிக்கப்பட்டதாகவும், 3 நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story