ஆசைவார்த்தை கூறி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் டிரைவர் மீது வழக்கு

ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திய டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அந்த மாணவி திடீரென்று காணாமல் போனார். அவரை முன்னீர்பள்ளம் போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே அந்த மாணவி திரும்பி வீட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தருவையை சேர்ந்த டிரைவர் முரளி (வயது 20) அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றது தெரியவந்தது.
போலீசார் தேடுவதை அறிந்து அவரை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு முரளி தப்பி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story